பொருளடக்கம்சிலப்பதிகாரம்

காட்சி 30 / 38

காட்சி-30

சிலம்போ சிலம்பு

பொற்கொல்லர் நிலையம்

மூல ஸ்கேன் 76

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[நூறு பொற் கொல்லர்களையும் நிறுத்தி வைத்துத் தலைமைப் பொற்கொல்லர் கேட்கிறார்]

பொற் : ம்...நீதி மன்றத்துக்குச் செல்லும் நேரம் நெருங்கிவிட்டது. இப்போதாவது உண்மையைச் சொல்லுங்கள்...யார் சிலம்பை எடுத்தது?...

நூறு பேரும் : நாங்களில்லை! ..நாங்களில்லை!...

பொற் : பிறகு...சிலம்புக்குச் சிறகு முளைத்தா பறந்து விட்டது!...சரி...சரி...அந்தப் பகற் கொள்ளைக்காரன் யார் என்பதைப் பாண்டிய மன்னரே கண்டு பிடிக்கட்டும்...ம்...புறப்படுங்கள்...என்னோடு!...

[அனைவரும் பின்தொடரப் பொற்கொல்லர் புறப்படுகின்றார்]

[கோவலன் ஒரு வீட்டில் சிலம்பை விலை கூறுகிறான்]

வீட்டுக்காரர் : எவ்வளவு விலையானாலும் சரி எடுத்துக் கொள்கிறேன். இரட்டைச் சிலம்பாக இருந்தால் கொடு.

கோவலன் : ஐயா! இதிலுள்ள மாணிக்கப் பரல்களுக்காக இதைத் தனியாக வாங்கக் கூடியவர் யாரும்...

வீட்டு : அதற்கென்றுள் அரண்மனைப் பொற்கொல்லரைப் போய்ப் பாரும்...அவருக்கு ஒரு வேளை தேவைப்படலாம்.

கோவ : வணக்கம் அய்யா...

வீட்டு : யாரோ வாழ்ந்த வீட்டுப் பிள்ளை—

[கோவலன் வேறு இருவரிடம் சிலம்பை விற்க முயல்கிறான்]

ஒரு : அடேயப்பா; விலை மதிக்க முடியாத சிலம்பு! சரி, நீ இதை எடுத்துக் கொண்டு அரண்மனைப் பொற்கொல்லரிடம் போ...அவர் விற்றுத் தருவார்!...

இரண் : அடேடேடே...இதோ அவரே வருகிறாரே...பொற் கொல்லரே!

[பொற் கொல்லர் வருதல்]

பொற் : என்ன?...

ஒரு : பொற்கொல்லரே, இவரிடம் ஒரு அழகான சிலம்பு இருக்கிறது.

பொற் : சிலம்பு?

ஒரு : ஆமாம்...விலை மதிப்பில்லாத சிலம்பு; இதை விற்றுத் தர வேண்டுமாம்.

பொற் : தருகிறேனய்யா. எனப்பா, நீ எந்த ஊர்?

கோவ : பூம்புகார்.

பொற் : தேடி அலைந்தது தானுகவே கிடைத்து விட்டது! நீ இந்தச் சிலம்போடு இந்த மண்டபத்திலேயே இரு; நான் அரசருக்குத் தெரிவித்து விட்டு உன்னை வந்து அழைத்துப் போகிறேன்.

கோவ : மிகவும் நன்றி!

[வணங்கி உட்காருகிறான். பொற்கொல்லர் மற்றவர்களை அழைத்துச் சைகை செய்தவாறு]

பொற் : நீங்கள் இருவரும் இவருக்குத் துணையாக இங்கேயே இருங்கள். நான் வந்து விடுகிறேன்.

[பொற் கொல்லர் செல்கிறார்]