பொருளடக்கம்மணிமகுடம்

காட்சி 31 / 47

காட்சி 31

காட்சி 31

மூல ஸ்கேன் 121, 122

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

(அரண்மனையில் அல்லி தூக்கம் வராமல் படுத்திருக்கிறாள். அப்போது புதுமைப்பித்தன் அங்கு வந்து, விளக்கை சிறிது தூண்டுதல் - அல்லி திடுக்கிட்டு எழுதல்.)

அல்லி: யார்?

(புதுமைப்பித்தன் ஓடி வந்து அவள் வாயைப் பொத்தி)

புது: ஸ்.. சப்தம் போடாதே..

(வாயைப் பொத்தியிருக்கும் அவன் கையை, அல்லி, மெதுவாக ரசித்தபடி எடுக்கிறாள்.)

புது: அல்லி - இதுதான் சமயம் - வா அரண்மனையை விட்டு ஓடிவிடலாம்.

அல்லி: நீங்கள் எப்படி வந்தீர்கள்?

புது: அதெல்லாம் பிறகு சொல்லுகிறேன்... புறப்படு!

அல்லி: காவலர்கள் அதிகமாயிற்றே?

புது: கவலைப்படாதே! அரசனும் தூங்குகிறான் - அரண்மனையும் தூங்குகிறது. விழித்துக்கொண்டிருப்பவர்கள் நாம் இருவரும்தான்! வா...வா!!

(அவள் கையைப்பிடித்து அழைத்துச் செல்லுதல்.)

அல்லி: தப்பி ஓடுவது...

புது: (சந்தேகமாய்) குற்றந்தான்! ஆனாலும் நாளைக்குக் கொலைக் குற்றத்திலிருந்து நீ தப்பிக்க வேண்டாமா? சீக்கிரம் வா. உம்...

(இருவரும் வெளியேறுதல்.)