காட்சி 55] [பூமாலை வீடு
காட்சி 55·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[பூமாலை ஊருக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அங்கு வந்த பரந்தாமன்]
பரந்தாமன்: எங்கக்கா பயணம்?
பூமாலை: மதராஸுக்கு...
பரந்தாமன்: என்ன திடீர்னு மதராஸ்!
பூமாலை: ஏன்? குமுதாவைப் பார்க்கப் போறேன்.போகக் கூடாதா?
பரந்தாமன் : கூடாதென்றா சொல்கிறேன் ...ம் .... ஆமாம் பாண்டியன் மெட்றாஸில்தானே !...
பூமாலை: ஆமாம். நீ ஏன் அதெல்லாம் கேக்கிறே ! உனக்குத்தான் உற்றார் உறவினர், நல்லவர் கெட்டவர் எதுவுங் கிடையாதே.
பரந்தாமன் : ஏதோ ஆத்திரத்தில் செய்துவிட்டேனக்கா அப்படி .
பூமாலை : நல்ல ஆத்திரம், கொஞ்சம் தவறியிருந்தால் குமுதா விதவையாக ஆகியிருப்பாள்.
(உள்ளே போகிறாள். நெக்லஸை பெட்டியில் வைக்கிறான். பூமாலை வந்ததும்)
பரந்தாமன் : நான் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்து விடக்கா! (பூமாலை பார்த்தல்) நான் பாண்டியனை சுட முயன்றது தவறுதான். என்னை ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டாயே ...
(வேலைக்காரி வந்து )
வேலைக்காரி : நேரம் ஆச்சும்மா.
பூமாலை: (பரந்தாமனிடம்) நான் வரட்டுமா.
பரந்தாமன் : சரிக்கா ! எல்லாரையும் விசாரிச்சேன்னு சொல்லு! பாண்டியனுக்கும் குமுதாவுக்கும் என் பரிபூரண ஆசீர்வாதங்களைச் சொல்லு !
(பூமாலை போகிறாள்)