காட்சி—37
காட்சி 37·46 காட்சிகளில்
(வெளியுக்கு போயிருந்த நொண்டி வருதல்)
நொண்டி : இராகவா இன்னிக்கு ஏதாவது விசேஷம் உண்டா?
ராக : பாலம் ஒரு பிச்சைக்காரி ஒரு குழந்தையுடன் வந்தாள் நாங்களெல்லாம் யாருன்னு கேட்டாள். நாங்கள் இரங்கூனிலே இருந்து சம்பாதிச்சிட்டு வர்றோம்னு சொன்னோம்... இரங்கூனிலேன்னுமன்று அண்ணன்மார்களைத் தெரியுமான்னு கேட்டாள். தெரியாதுன்னு சொல்லிவிட்டோம்.
நொ : அவளது பெயரை என்னவென்று சொன்னாள்?
ஒரு : அதுநம்ம தமிழ்நாட்டு பெயராகவே தெரியலியே?
ராக : என்னமோ—சந்திரசேகரன்...
நொ : சந்திரசேகரன், ஞானசேகரன், குணசேகரன் என்கிறாளா?
எல் : ஆம்...
நொ : அய்யோ கல்யாணி! என் தங்கை கல்யாணி! கல்யாணி! (என்று கதறி கீழே விழுகிறான்)