காட்சி—6

காட்சி 6·46 காட்சிகளில்

[மதுரையில் கல்யாணியும் கணவன் தங்கப்பனும்]

தங் : கல்யாணி!

கல் : இதோ வந்துட்டேன்.

தங் : ஹூம்...புறப்படு சீக்கிரம்

கல் : ஏன் பறக்கிறீங்க (ஆடை அணிந்து வரும் போது தந்தையைப் பார்த்து) அப்பா போய்விட்டு வர்றோம்.......

மாணிக் : சரியம்மா ஜாக்கிரதையா போயிட்டுவாங்க,

[இந்நேரம் எதிர்வீட்டு பார்வதி வருகிறாள்]

பார் : கல்யாணி...

கல் : வாங்க அக்கா

பார் : நல்ல சமயத்திலேதான் வந்திருக்கேன்.. எங்கே பிரயாணம்?

மாணி : ஒண்ணுமில்ல மாப்பிள்ளை எழுதின கதை படம் பிடிக்கப் போறாங்களாம்.

தங் : ஆமா! கல்யாணி ரொம்ப நாளா படம் பிடிக்கிறதை பார்க்கணும் பார்க்கணும்னு தொந்தரவு பண்ணுது.

பார் : போகவேண்டியது தான். முழுகாதிருக்கிற பெண்ணு இப்படி நேரம் காலம் இல்லாமல் வெளியே போனால் நல்லாவா இருக்கு.

மாணி : தப்புதான் குழந்தை ஆசைபடுதில்லே போயிட்டுத்தான் வரட்டுமே.

கல் : இன்னைக்கு ஒரு நாளைக்குத்தானக்கா!

பார் : ம்...போம்மா! போ! மாப்புள்ளே நீ சொன்ன படியெல்லாம் கேட்டிரு! பையன் வந்துல்ல அடக்கணும்.

கல் : போங்க அக்கா

மாணி : அதுக்குள்ளே பையனே தீர்மானம் பண்ணிட்டியா?

பார் : நான் தீர்மானித்தாலும் தீர்மானிக்காவிட்டாலும் அவங்க ரெண்டு பேருமே தீர்மானம் பண்ணிட்டாங்களாம் பையனுக்கு பன்னீர் செல்வம்னு பெயர் வைக்கிறதா...

தங் : அதுமட்டுமல்ல பெண் பிறந்தால் நாகம்மான்னு பெயர் வைக்கிறதா தீர்மானிச்சிருக்கோம்.

(புறப்படுகின்றனர்)

மணி : என் பொண்ணு புத்திசாலிதான். இந்த சந்தோஷத்தைப் பார்க்க மகன்களும் இருந்தால்...