காஞ்சித் தலைவன்
வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே
வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே
படைகள் செல்கவே - படைகள் செல்கவே...
(வெல்க நாடு)
தாயின் ஆணை கேட்பதற்கு தலை வணங்கும் தங்கமே
தலைகொடுத்து தாயின் மானம் காத்திடுவாய் சிங்கமே
சென்று வா - வென்று வா...
(வெல்க நாடு)
குமலைப் போல மழலை பேசும்
குழந்தைகளின் முத்தமும்
கொஞ்சுகின்ற அஞ்சுகத்தின்
கோலமொழிச் சத்தமும்
உன் குன்று தோளில் புது பலத்தை வழங்குமடா நித்தமும் சென்று வா -
வென்று வா...
(வெல்க நாடு)
மகிமை கொண்ட மண்ணின் மீது எதிரிகளின் கால்கள்
எதிரிகளின் கால்கள்
மலர் பறிப்பதில்லையடா வீரர்களின் கைகள்
மாவீரர்களின் கைகள்
சென்று வா - வென்று வா...
(வெல்க நாடு)
ஓங்கிய வாள் போன்ற வடிவமடா - அவர்
ஒளி விழிகள் உலகத்தின் படிவமடா
வேங்கைப் புலி மன்னனடா
வீரர்களின் தலைவனடா - அவர்
கட்டளைக்குக் காத்திருந்து நல்லவனே
களம் நோக்கிப் புறப்படடா வல்லவனே..
(வெல்க நாடு)