பெண் சிங்கம்
வீணையில் எழுவது வேணுகானமா
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
ஆஹா...
ஆண்
வீணையில் எழுவது வேணுகானமா
திருவாதிரையின் தோடி ராகமா
திருவெண்காட்டு மகுடி நாதமா
இசைவதனால் இணையும் ஈருயிர்கள்
இணைந்தபின்பு இரண்டும் ஓர் உயிர்தானே
ஆண் / பெண்
ஆண் : காலை அரும்பி மாலை மலரும்
காதல் நோயால் நானும் உருகினேன்
பெண் : காலை அரும்பி மாலை மலரும்
காதல் நோயால் நானும் உருகினேன்
ஆண் : ஓவியமாகி நீயும் கொடுமுடி கோகிலம்தானே
கொள்ளை கொண்டாய்
நெஞ்சத்தினையே, கொடுத்துவிடு
எடுத்தபடியே
பெண் : தேனும் பாலும் கலந்த பின்னே
தனியே சுவையை பிரிக்கலாகுமா
ஆண் : இனிக்கும் தேனாய் நீயும்
துடிக்கும் ஆண்பாலாய் நானும்
திருமணம் ஆன பின்னால் தேனும் பாலுமாகலாம்
பெண் : ஆயிரம் இரவுகள் போதும்
பாயிரம் பாடல் போதும் இப்போது
ஆண் : செம்புலம் நீர்போல அன்புடை நெஞ்சமும்
நாம் கலந்தோமே