பூம்புகார்

ஒருவனுக்கு ஒருத்தி என்ற

கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற

உயிர்மூச்சை உள்ளடக்கி

அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன் பழிப்பதில்லாயின் நன்று - எனும்

திருக்குறளை மறவாதே

திசை தவறிப்போகாதே

வாழ்க்கை எனும் ஓடம்

வழங்குகின்ற பாடம்

மானிடரின் மனதினிலே

மறக்க வொண்ணா வேதம்

(வாழ்க்கை)

வாலிபம் என்பது கலைகின்ற வேடம் - அதில்

வந்தது வரட்டும் என்பவன் முழு மூடம்

வருமுன் காப்பவன் தான் அறிவாளி - புயல்

வருமுன் காப்பவன் தான் அறிவாளி

வந்தபின்னே தவிப்பவன்தான் ஏமாளி

(வாழ்க்கை)

துடுப்புகள் இல்லாப் படகு - அலைகள்

அழைக்கின்ற திசையெல்லாம் போகும் - தீமையைத்

தடுப்பவன் இல்லாத வாழ்வும் - அந்தப்

படகின் நிலைபோலே ஆகும்.