மந்திரிகுமாரி
ஊருக்கு உழைப்பவண்டி
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
தொகையறா
ஊருக்கு உழைப்பவண்டி
ஒரு குற்றம் அறியான்டி
உதை பட்டு சாவாண்டி - எருமைக் கன்னுக்குட்டி
பாட்டு
நல்லதுக்குக் காலமில்லே
நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு
சொல்லப்போனால் வெட்கக்கேடு - எருமைக் கன்னுக்குட்டி
தொகையறா
ஏய்ச்சுப் பொழைக்கிறவன்
ஏழடுக்கு மாளிகையில்
எகத்தாளம் போடுறானே
அவன் - பேச்சை மறுக்கிறவன்
பிச்சை எடுக்கிறானே - எருமைக் கன்னுக்குட்டி
பாட்டு
நாட்டுக்குத் தலைவனென்று நம்பும்படி பேசிவிட்டு
வேணசெல்வம் வாரியே போவாரடி
நாடு செழிக்க பெண்ணி நாளெல்லாம் பாடுபடும்
ஏழைக்கிக் காலமில்லே எவனெவனோ வாழுகின்றான் -
எருமைக் கன்னுக்குட்டி